அலுவலகங்களில் வேலை செய்வோர் பலர் செய்வினைகளால் பாதிக்கப்பட்டு சோம்பேறித்தனமாகி தாம் என்ன வேலை செய்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். வேலை செய்யப் பிடிக்காது. அலுவலகத்தில் வைத்த பொருளை மறந்து விடுவதால் மேலாளர் கேட்கும்பொழுது எடுத்துக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் கெட்ட பெயர் வந்து விடுகிறது. தன்னால் வேலையில் சரிவர இயங்க முடியாமல் போவதால் எல்லோரிடமும் காரணமில்லாமல் எரிந்து விழுவார்கள். வேலையில் கவனமில்லாமல் இருப்பதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விடுகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.
அலுவலக பணியாளர்களிடம் போட்டி, பொறாமை குணம் மேலோங்கி உடன் பணிபுரிகின்ற இடத்தில் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு ஒருவருக் கொருவர் எதிரிகளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களை முடித்துக் கட்ட மறைமுகமாக செய்வினை, ஏவல், வைப்புகள் இவைகளை கையாளுகிறார்கள். இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறார்கள். பாதிப்பு அடைந்தவர்கள் மனவேதனைக்கு ஆளாகி நிவர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து, செய்வது அறியாமல் புலம்பி நிர்கதியாகி அல்லல் படுவோர் ஏராளம்.
பெரிய பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள்,தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் இவைகளின் அபரிதமான வளர்ச்சி பொறுக்காமல் சிலர் செய்வினை செய்து விடுகிறார்கள். அதனால் நிறுவனங்களில் உற்பத்திகள் பாதித்து விடுகின்றது. உரிய நேரத்தில் சரக்குகள் போய் சேராததால் தொழில் நலிவடைந்து விடுகிறது. செய்வினையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் சரிவர வேலைக்கு வரமாட்டார்கள். இதனால் தொழிலில் சரிவு ஏற்பட்டு அவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சிலசமயம் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்தவமனைகள் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. செய்வினையின் காரணமாக அந்த நிறுவனங்களுக்கு சில அவப்பெயர்களும் ஏற்பட்டுவிடும்.
நன்கு வியாபாரம் நடைபெற்று வந்த ஸ்தாபனத்தில் மெல்ல மெல்ல வியாபாரம் குறைய ஆரம்பித்து பிரச்சனைகள் கிளம்பி கொடுக்கல் வாங்கல்களில் நாணயம் கெட்டு வேலை செய்ய ஆட்களை வரவிடாமல் தொழிலை முடக்கி எதிரிகள் மெல்ல மெல்ல வியாபாரத்தை அழித்து விடுகின்றார்கள்.
ஏவல், செய்வினைகளால் பாதிக்கப்பட்ட வீடுகளின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. வீட்டிலும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்துகொண்டே இருக்கும். வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலே வெறுப்பாக தோன்றும். பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். பிள்ளைகளின் திருமணம் பெரும் பிரச்சனையாகி திருமணம் தள்ளிக்கொண்டே போகும். அமானுஷ்ய ஆவிகளின் பாதிப்பினால் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதாவது வைத்திய செலவு வந்து கொண்டேயிருக்கும். ஆனால் வைத்தியத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் செலவு மட்டும் ஆகிக் கொண்டிருக்கும். வீட்டில் எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்காது.
இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள்; நிவர்த்தியடைந்து மேன்மை அடைய… தொடர்பு கொள்ள வேண்டியது
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


